2. வடிவேலு அவர்கள் காமெடி போல சும்மா இருப்பது ரொம்ப கஷ்டம். அதுவும், அகமும் புறமும் சும்மா இருப்பது மிகக் கடினம். ஏன்?
நம் எண்ணங்கள் ஆனது தொடர்ந்து மனத் திரையில் ஓடிக்கொண்டு இருப்பதை இன்று உங்களுக்கு விருப்பம் இருந்தால் உணர்ந்து பார்க்கலாம்.
பயந்தவர்கள் மேற்கொண்டு படிக்க வேண்டாம் என்று எச்சரிக்கை செய்கிறோம்!
பயமா, எனக்கா?
நான் நூறு கிலோமீட்டர் வேகத்தில் வண்டியில் பறப்பவன், குவாட்டர் அடித்தும் அசராதவன், வம்பு சண்டை எனக்கு விருந்து மாதிரி, நான் பார்க்க தான் பொண்ணு, ஆனா ரெண்டு ஆண்களுக்கு சமம், அன் டேம்ட், வைல்ட் என்பவர்கள் கூட தியானம் என்றவுடன் சற்று ஜெர்க் அடிப்பதை கண் கூடாகக் கண்டு இருக்கிறேன் என்பதால் இந்த செல்ல எச்சரிக்கை.
இன்றைய பயிற்சி:
கொஞ்சம் தனிமையில் அமரவும்.
அது சர்ச்சோ, கோயிலோ, பேருந்தில் ஜன்னலோர இருக்கையோ, ஆஃபீஸ் கேன்டீனோ, வகுப்பில் கடைசி பென்சோ, வீட்டில் பாத்ரூமோ எதுவாகவும் இருக்கலாம். இடம் பொருட்டு இல்லை. நீங்கள் தான்.
உங்களுக்கு தோதான ஒரு இடம் கண்டடைந்து, அமர்ந்து, கண்கள் மூடி
இருக்கவும்.
உடனே, உங்கள் மனதில் முதுகை விறைப்பாக வைக்க வேண்டுமா அல்லது நன்கு சாய்ந்து அமரலாமா? என்று கேள்வி எழுகிறதா?
அதுவே உங்கள் முதல் எண்ணம்.
பத்தே பத்து நிமிடங்கள் கண் மூடி, உங்கள் மன த் திரையில் ஓடும் எண்ணங்களைத் தடுக்காமல் வேடிக்கை பாருங்கள்.
உதாரணமாக,
மாணவர்கள், அடுத்து வரும் தேர்வு பற்றி!, நண்பிகள் அலைபேசி டாப் அப், புரியாத பாடத்தில் கேள்வி வந்தால் என்ன செய்வது என்றோ;
அலுவலர்கள், முடிக்க வேண்டிய வேலை, யாரை போட்டு கொடுப்பது, ப்ரோமோஷன் பற்றியோ;
முதலாளிகள்,மோடி தொல்லைகள், ஜி.எஸ்.டி., வருமான வரி, லாபம், விரிவாக்கம் பற்றியோ,
பெண்கள், புது டிசைன் உடைகள், புருவம் திருத்துதல், பாய் பிரண்டுகள் பற்றியோ,
திருமணம் ஆனவர்கள், மாமியார் தொல்லை, மச்சினி, பிள்ளை, நகை, சிறுவாடு பற்றியோ எழும் எண்ணங்களில் முழ்கி விடாமல் கவனிக்கவும். முழ்கி, அதிலேயே ரத்தம் கொதித்து அரைமணி நேரம் கடந்து கண் திறந்தாலும் பரவாயில்லைதான்.
அதாவது, உங்கள் எண்ணங்கள் ஒரு சரம் போல தொடர்ந்து, ஒன்று மாற்றி ஒன்று வருவதைப் பார்த்தீர்கள், உணர்ந்தீர்கள் என்றால், சோதனை வெற்றிதான்.
இது தான் Mental Diarrhoea!!!
(தொடரும்...)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக