புதன், 11 ஏப்ரல், 2018

Mental Diarrhoea!!. உங்களுக்கு மனப் போக்கு உண்டா?!


2. வடிவேலு அவர்கள் காமெடி போல சும்மா இருப்பது ரொம்ப கஷ்டம். அதுவும், அகமும் புறமும் சும்மா இருப்பது மிகக் கடினம். ஏன்?

நம் எண்ணங்கள் ஆனது தொடர்ந்து மனத் திரையில் ஓடிக்கொண்டு இருப்பதை இன்று உங்களுக்கு விருப்பம் இருந்தால் உணர்ந்து பார்க்கலாம்.

பயந்தவர்கள் மேற்கொண்டு படிக்க வேண்டாம் என்று எச்சரிக்கை செய்கிறோம்!

பயமா, எனக்கா?
நான் நூறு கிலோமீட்டர் வேகத்தில் வண்டியில் பறப்பவன், குவாட்டர் அடித்தும் அசராதவன், வம்பு சண்டை எனக்கு விருந்து மாதிரி, நான் பார்க்க தான் பொண்ணு, ஆனா ரெண்டு ஆண்களுக்கு சமம், அன் டேம்ட், வைல்ட் என்பவர்கள் கூட தியானம் என்றவுடன் சற்று ஜெர்க் அடிப்பதை கண் கூடாகக் கண்டு இருக்கிறேன் என்பதால் இந்த செல்ல எச்சரிக்கை.

இன்றைய பயிற்சி:
கொஞ்சம் தனிமையில் அமரவும்.
அது சர்ச்சோ, கோயிலோ, பேருந்தில் ஜன்னலோர இருக்கையோ, ஆஃபீஸ் கேன்டீனோ, வகுப்பில் கடைசி பென்சோ, வீட்டில் பாத்ரூமோ எதுவாகவும் இருக்கலாம். இடம் பொருட்டு இல்லை. நீங்கள் தான்.

 உங்களுக்கு தோதான ஒரு இடம் கண்டடைந்து, அமர்ந்து, கண்கள் மூடி
இருக்கவும்.

உடனே, உங்கள் மனதில் முதுகை விறைப்பாக வைக்க வேண்டுமா அல்லது நன்கு சாய்ந்து அமரலாமா? என்று கேள்வி எழுகிறதா?
 அதுவே உங்கள் முதல் எண்ணம்.

பத்தே பத்து நிமிடங்கள் கண் மூடி, உங்கள் மன த் திரையில் ஓடும் எண்ணங்களைத் தடுக்காமல் வேடிக்கை பாருங்கள்.
உதாரணமாக,
மாணவர்கள், அடுத்து வரும் தேர்வு பற்றி!, நண்பிகள் அலைபேசி டாப் அப், புரியாத பாடத்தில் கேள்வி வந்தால் என்ன செய்வது என்றோ;

அலுவலர்கள், முடிக்க வேண்டிய வேலை, யாரை போட்டு கொடுப்பது, ப்ரோமோஷன் பற்றியோ;

முதலாளிகள்,மோடி தொல்லைகள், ஜி.எஸ்.டி., வருமான வரி, லாபம், விரிவாக்கம் பற்றியோ,

பெண்கள், புது டிசைன் உடைகள், புருவம் திருத்துதல், பாய் பிரண்டுகள் பற்றியோ,

திருமணம் ஆனவர்கள், மாமியார் தொல்லை, மச்சினி, பிள்ளை, நகை, சிறுவாடு பற்றியோ எழும் எண்ணங்களில் முழ்கி விடாமல் கவனிக்கவும். முழ்கி, அதிலேயே ரத்தம் கொதித்து அரைமணி நேரம் கடந்து கண் திறந்தாலும் பரவாயில்லைதான்.

அதாவது, உங்கள் எண்ணங்கள் ஒரு சரம் போல தொடர்ந்து, ஒன்று மாற்றி ஒன்று வருவதைப் பார்த்தீர்கள், உணர்ந்தீர்கள் என்றால், சோதனை வெற்றிதான்.

இது தான் Mental Diarrhoea!!!

(தொடரும்...)

சனி, 7 ஏப்ரல், 2018

த்யானம் ! ஒரு எளிய அறிமுகம்


த்யானம் என்றால் என்ன? சயின்ஸ் வளர்ந்த இந்த நூற்றாண்டில்
த்யானம் தேவையா?
ஆன்மிகமும் மதமும் ஒன்றா?
ஆதி கேள்விகளான இவற்றிற்கு விடை காண விழைந்த பயணத்தில் கிடைத்ததை பகிர்கிறேன். 
தவறிருந்தால் திருத்துங்கள்!

பிடித்தால்?
வாங்க, தியானம் பழகலாம்!!

த்யானம் தெரிய நம் மனம், அதன் இயக்கம் பற்றி அடிப்படை புரிதல் தேவை.

கர்ப்பிணிகள், பலகீன இதயம் உள்ளவர்கள்  பயப்பட வேண்டாம்!
மிக எளிய உதாரணம் மூலம் பார்க்கலாம். முதலில் Mental Diarrhoea.

டயரியா, வயிற்றுப் போக்கு தெரியும். அதென்ன, மென்டல் டயரியா?
மனப் போக்கா?! என்றால், ஆம் என்பதே பதில்.

மனம் என்பதன் இணைச் சொல் (synonym), எண்ணம். எண்ணங்களே நம்மை உருவாக்கி, வழி நடத்துகின்றன! ஆனால் அந்த எண்ணங்கள் நம் கட்டுப்பாட்டில் இருக்கிறதா என்றால், இல்லை என்பதே பதில்.

ஓரு சோதனை செய்யலாம், கண் திறந்து தான்!
சரியாக ஒரு நிமிடம் ஒரு கடிகார முள் நகர்தலை கவனியுங்கள். அல்லது, அலைபேசி stop watch ல் 60 வினாடிகள் ஓடுவதை உற்று கவனிக்கவும்.

கவனித்து விட்டீர்களா?

முழுமையாக கவனித்தவர்கள், முதுகில் ஷொட்டு வைத்துக் கொள்ளலாம்.

கடிகார முள் கவனிக்கும் போது எத்தனை பேருக்கு எண்ணங்கள் வந்தது? அதாவது, வீட்டு வேலை, மனைவி, நண்பர்கள், குழந்தை, ஹோம் ஒர்க், ரெகார்ட் நோட், சினிமா, IPL, பிடித்த பாட்டு, வெண்குழல் வத்தி அட! சிகரெட்டு தாங்க, ஸ்கூல், ரிசல்ட், பகார்டி, பிட்டு பட நடிகை என்று எண்ணங்கள் வந்திருந்ததா?

எத்தனை தினுசான எண்ணங்கள் வந்தது என்பதை பதிவிட்டால் நன்று.

மனதை உணர முதல் படி எடுத்து வைத்துவிட்டீர்கள். 

மகிழ்ச்சி.

(தொடரும்...)

பயிர் ரகங்கள் பாதுகாப்பு சட்டம் (பாகம்- 2)

பயிர் ரகங்கள் பாதுகாப்பு சட்டம் 2 பயிர் ரகங்கள் பாதுகாப்பு மற்றும் விவசாயிகள் உரிமை சட்டம் (பாகம்- 2) இதற்கு தனியாக புதியதொரு சட்டம்...