வெள்ளி, 31 மே, 2019

பயிர் ரகங்கள் பாதுகாப்பு சட்டம் (பாகம்- 2)

பயிர் ரகங்கள் பாதுகாப்பு சட்டம் 2

பயிர் ரகங்கள் பாதுகாப்பு மற்றும் விவசாயிகள் உரிமை சட்டம்

(பாகம்- 2)

இதற்கு தனியாக புதியதொரு சட்டம் தேவையா? நம் நாட்டின் பேடன்ட் சட்டம் போதாதா என்று தோன்றுகிறதல்லவா? இந்திய பேடன்ட் சட்டம் 1970ல் அமலானது. பின் 1999, 2002ல் மேலும் சில பிரிவுகள் இதில் சேர்க்கப்பட்டன. இதன் மூலம் இயந்திரங்கள், விவசாயக் கருவிகள், விவசாயப் பயன்பாட்டுள்ள இரசாயனங்களை உற்பத்தி செய்யும் முறைகள் ஆகியவற்றை மட்டுமே பேடன்ட் செய்யலாம். பின்வருவனவற்றை பேடன்ட் செய்ய முடியாது!

விவசாய சாகுபடி முறைகள், உயிரினங்கள், பயிரினங்கள், "பயிர் ரகங்கள்", விலங்குகள், மீன்கள், பறவைகள், ரசாயன மற்றும் உயிரிரசாயன வழிமுறைகள் மூலம் கிடைக்கும் பொருட்கள், மருத்துவம், அறுவை சிகிச்சை, தடுப்பு முறைகள், விலங்கு மற்றும் பயிர்களுக்கு ஏற்படும் நோய்களை தீர்க்கும் முறைகள், அவற்றின் வியாபார மதிப்பை அதிகரிக்கும் வழிகளை நமது பேடன்ட் சட்டம் மூலம் பாதுகாக்க இயலாது. இந்த சட்டத்தை அமலாக்குவதற்காக "பயிர் ரகங்கள் பாதுகாப்பு மற்றும் விவசாயிகள் உரிமை ஆணையத்தை" (Protection of Plant Varieties and Farmers Rights Authority) நவம்பர் 11, 2005ல் வெளியிட்ட கெசட் நோட்டிபிகேசன் மூலம் மத்திய அரசு நிறுவியுள்ளது.

PPV & FRA, 2001 சட்டத்தின் நோக்கம்
* தரமான விதை உற்பத்திக்கு உத்வேகம் அளித்து உயர்தர விதைகளை விவசாயிகளுக்கு கிடைக்கச் செய்வது

*விவசாய ஆராய்ச்சியில் சிறப்பு கவனம் செலுத்தி புதிய நிதி ஆதாரங்களை ஈர்த்து புதிய ரகங்களை உருவாக்குவது

* புதிய ரகங்களை உருவாக்கும் பயிர் இனப்பெருக்க வல்லுநரை (Plant breeder) ஊக்கப்படுத்தி விவசாய ஆராய்ச்சிக்கு புத்துயிர் அளிப்பது

* பாரம்பரியம் மிக்க ரகங்களை நீண்ட காலமாக பாதுகாத்து வரும் விவசாயிகளின் உரிமைகளை அங்கீகரித்து பாதுகாப்பது.

(தொடரும்)

பயிர் இரகங்கள் பாதுகாப்பு சட்டம் (பாகம் 1)

பயிர் இரகங்கள் பாதுகாப்பு சட்டம்

பயிர் ரகங்கள் பாதுகாப்பு மற்றும் விவசாயிகள் உரிமை சட்டம்

(பாகம் 1)

விவசாயமே நம் நட்டின் பலம் என்ற் கருத்து பல்லாயிரம் ஆண்டுகளாக நம்மால் ஏற்றுக் கொள்ளபட்ட கருத்தாகும். நம் நாட்டின் மொத்த ஆண்டு வருவாயில் (GDP) 31 சதம் விவசாயம் மூலம் கிடைக்கிற்து என்று கணக்கிடப்பட்டு உள்ளது. மேலும், 64 சதத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் விவசாயத்தையே பெரிதும் நம்பியுள்ளனர். எனவே, விவசாயம் சார்ந்த எந்த ஒரு முடிவுக்கும் பெரும் விளைவுகள் ஏற்படுவது இயல்பே!.

இதை மனதில் கொண்டே நீண்ட பரிசீலனைக்குப் பின் இந்திய அரசு "பயிர் ரகங்கள் பாதுகாப்பு மற்றும் விவசாயிகள் உரிமை சட்டம்,2001" என்ற சட்டத்தை நிறைவேற்றி உள்ளது. இந்திய அரசு யூபாவின் பேடன்ட் முறையை அப்படியே பின்பற்றாமல், விவசாயிகளுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் போதிய சுதந்திரமும், உரிமையும் அளிக்கக்கூடிய தனித்தன்மை உடையதாக உருவாக்கப்பட்டதே இச்சட்டம். 2001ல் இயற்றப்பட்ட இச்சட்டத்தின் விதி முறைகள் செப்டம்பர் 12, 2003ல் கெசட்டில் வெளியிடப்பட்டது.

இச்சட்டம் பற்றி அறியும் முன், 'காட்' (GATT), 'டிரிப்ஸ்' (TRIPS) மற்றும் உலக வர்தக சபை (WTO) பற்றிய ஒரு பிளாஷ் பேக்!

இரண்டாம் உலகப் போரின் இறுதியில் போரினால் ஏற்பபட்ட பாதிப்பை சீரமைக்கவும், நல்லுறவை ஏற்படுத்தவும் நேச நாடுகள் ஒன்று சேர்ந்து மூன்று ஸ்தாபனங்களை நிறுவின. முதலாவது 'காட்' , பன்னாட்டு உறவுகளை நெறிபடுத்துவதற்கானது; அடுத்தது 'ஐ.எம்.எப்'’ (ஈMF) - முறையான பணப்பரிமாற்றம் தொடர்பானது , மூன்றாவது 'உலக வங்கி' (World Bank / IBRD) போரினால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைத்து மேம்படுத்துவதற்கானது.

இதில் 'காட்' ஒப்பந்தத்தின் உருகுவே மாநாட்டின் விளைவாக உருவானது தான் உலக வர்தக சபை. 'காட்'டில் உள்ள நாடுகள் ஜனவரி 1, 1995ல் உ.வ.சபை உருவாகக் கையெழுத்திட்டன. இந்தியாவும் உலக வர்தக சபையின் நிறுவன நாடுகளுள் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.உருகுவே மாநாட்டில் மூன்று புத்தம் புதிய ஒப்பந்தங்கள் உருவாயின. அதிலொன்றுதான் 'டிரிப்ஸ்'. மற்றவை, 'டிரிம்ஸ்' (TRIMS) ம், 'Trade in Services' ஆகும்.

'டிரிப்ஸ்' ஒப்பந்தம் ஐ.பி.ஆர் எனும் ‘Intellectual Property Rights’ மனித குலம் முன்னேற மிக அவசியம் என்கிறது. கண்டுபிடிப்பாளருக்கு பயனிருந்தால் தானே, புதியன கண்டுபிடிக்க ஊக்கம் பிறக்கும் என்பது இதன் லாஜிக்*.


டிரிப்ஸ்'ல் ஏழு வகையான 'ஐ.பி.ஆர்'கள் பாதுகாக்கப்படும். அவை, காப்பிரைட்ஸ், டிரேட் மார்க், பேடன்ட், ஜியாகரபிகல் இன்டிகேஸன் (உதாரணம்: காஞ்சிபுரம் பட்டு, டார்ஜிலிங் டீ), இன்டஸ்ட்ரியல் டிசைன், இன்டக்ரேடட் சர்க்யூட் மற்றும் டிரேட் சீக்ரெட்ஸ் ஆகும்.

'டிரிப்ஸ்' ஒப்பந்தப்படி செடிகளையும் விலங்குகளையும் பேடன்ட் செய்ய முடியாது. ஆனால், பயிர் இரகங்களை பாதுகாக்கலாம். எ.கா. நெல்லை பேடன்ட் செய்ய முடியாது ஆனால் அதன் இரகங்களை (பொன்னி, பொன்மணி, ADT 43) பாதுகாக்கலாம்.

(ப்ளாஸ் பேக் முடிந்தது. அப்பாடா!)
(தொடரும்)

பயிர் ரகங்கள் பாதுகாப்பு சட்டம் (பாகம்- 2)

பயிர் ரகங்கள் பாதுகாப்பு சட்டம் 2 பயிர் ரகங்கள் பாதுகாப்பு மற்றும் விவசாயிகள் உரிமை சட்டம் (பாகம்- 2) இதற்கு தனியாக புதியதொரு சட்டம்...